தன்னிடம் சாட்டை என்ற யூடியூப் சேனல் மட்டுமல்ல மேலும் 15 யூடியூப் சேனல்கள் உள்ளது என்றும் ஒன்றில் தடை ஏற்பட்டால் மற்றது செயல்பட தொடங்கும் என கும்பகோணத்தில் இன்று இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தெருமுனை கூட்டத்தில் இக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசும்போது தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தெருமுனைப் பிரச்சாரம் இன்று இரவு கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் என்ற இடத்தில் நடைபெற்றது.
இதில் இக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது, அதிமுக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கிறது.ஓபிஎஸ்யும், இபிஎஸ்யும் தனி அறையில் விட்டால் ஒருவரை ஒருவர் கடித்து கொதறி கொள்வார்கள் என்றும், இவர்களிடையே புகுந்து சசிகலா அந்த கட்சியை அபகரிக்க முயல்கிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழை வளர்ப்பதற்காகவே தான் தவம் இருந்து பிறந்துள்ளதாக கூறும் பிரதமர் மோடி, சமீபத்தில் வாரணாசியில் தமிழ் சங்கமும் என்ற நிகழ்வை மோடி தொடங்கி வைத்து பேசிய பேச்சை திருவள்ளுவர் உயிருடன் இருந்து கேட்டிருந்துதால் எழுத்தாணியால் நடு மண்டையில் குத்தி இருப்பார் என கடுமையாக சாடினார்.
நாம் தமிழர் கட்சி இடம் நூற்றுக்கு மேற்பட்ட யூடியூப் சேனல்கள் உள்ளது என்றும், தன்னிடம் சாட்டை என்ற யூடியூப் சேனல் மட்டுமல்ல மேலும் 15 யூடியூப் சேனல்கள் உள்ளன என்றும் இதில் ஒன்றில் தடை ஏற்பட்டால் மற்றது செயல்பட தொடங்கும் என சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…