மத்யபிரதேசத்தில் ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி 30 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிரிஞ்சை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது அதனை அவர்கள் மீறியுள்ளனர் என குற்றசாட்டு எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா, அதிகாரிகளால் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுமாறு துறைத் தலைவர் உத்தரவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்துவதை மாணவர்களின் பெற்றோர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
எச்.ஐ.வி பரவ தொடங்கியதில் இருந்து 1990கலீல் இருந்து ஒரு சிரிஞ்சை ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என விதிமுறை உள்ளது, ஆனால் நீங்கள் எப்படி ஒரு சிரிஞ்சை 30 மாணவர்களுக்கு பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பியதற்கு பொருட்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்ததாக பதில் அளித்துள்ளார். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு ஒரு சிரிஞ்சை பயன்படுத்த கூடாது என தெரியாதா என கேள்வி எழுப்பியதற்கு , தெரியும் ஆனால் அதிகாரிகள் ஒரு சிரிஞ்சை மட்டும் பயன்படுத்துமாறு கூறினார், அது எப்படி எனது தவறாக முடியும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஜிஜேந்த்ரா மீதும் மேலும் தேவையான பொருட்களை வழக்காததால் மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…