தமிழக பாஜக தலைவர் அரசியல் செய்வதற்காக அடுத்தவர்கள் மீது புழுதியை வாரி தூவிக்கொண்டிருக்கிறார் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மடாதிபதிகள் பிரிவினையை தூண்டும் விதத்திலோ, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலையோ பேசக்கூடாது என கூறியுள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட திருக்கோகரணம் மியூசியம் அருகே அந்த வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி கடந்த நகர்மன்ற கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தலின் படி திருச்சி சாலையில் அவரது சொந்த சாலையில் 40 ஆயிரம் மதிப்பில் 3 சிசிடிவி கேமராக்களை பொறுத்தியுள்ளார், இதனை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், அறநிலை துறையில் உள்ள அதிகாரிகளாக இருக்கட்டும், மடாதிபதிகள் ஆதீனங்கள் என அவரவர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அதே போல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உரிமை உள்ளது. அதனால் அவர் அவர்கள் அளவோடு இருக்க வேண்டும்.
மடாதிபதிகள் பேச கூடாது கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாது என்பது இல்லை, அவரவர்களே கருத்தை தெரிவிக்கலாம், மடாதிபதிகளோ தேவாலயம், பள்ளிவாசல், இந்து மதக் கோயில்கள் சம்பந்தப்பட்டவர்கள் மதத் தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டி கொள்ளலாம். அவரவர் மதத்தை புகழ்ந்துகொள்ளலாம், அனால் அடுத்தவர் மதத்தை இகழ்தல் கூடாது, மற்ற மதத்தினரை புண்படுத்துதல் கூடாது, ற்ற நம்பிக்கையை உடைக்கும் விதத்திலோ அதன் மூலமாக மத பிரச்சனையோ மக்கள் பிரச்சினையையோ பிரிவினையை தூண்டும் படி பேசக்கூடாது என கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை இல்லை என்று கூறிய திருநாவுக்கரசர், அண்ணாலை சொல்வது வேத வாக்கா என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றும் அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார் என்வும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…