Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே நாளில் கோடீஸ்வரன்... ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 25 கோடி பணம்!

UDHAYA KUMAR September 19, 2022 & 09:03 [IST]
ஒரே நாளில் கோடீஸ்வரன்...  ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 25 கோடி பணம்!Representative Image.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். ஒரே நாளில் கோடீஸ்வரராகியிருக்கிறார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அனூர். இவருக்கு வயது 35. பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு அவ்வப்போது லாட்டரி சீட்டு வாங்கி தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் ரூபாய் லாட்டரிக்காக எடுத்து வைத்துவிடுவாராம். 

குடும்பத்தினர் இப்படி ஏன் காசை கரியாக்குகிறீர்கள் என்று கேட்கும்போதெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும் காத்திருங்கள் என அவர்களை பேசவிடாமல் செய்வாராம். அவர் சொன்ன அதிர்ஷ்டம் இப்போதுதான் அடித்துள்ளது. இதை வைத்து என்ன செய்யப்போகிறேன் என்பதையெல்லாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார். 

முன்னதாக, இந்த லாட்டரி சீட்டுக்கான பரிசு பெறும் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்யும் விழா நடைபெற்றது. கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் இதில் கலந்து கொண்டு குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்தார். ஆட்டோ ஓட்டுநரான அனூப் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்