திருவண்ணாமலை மாவட்டம் டவுன் மணிக்கூண்டு அருகில் 5ஸ்டார் என்ற அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கிவருகிறது.
இந்த ஹோட்டலில் நேற்று ஆரணி அருகே உள்ள நந்தம்பாக்கத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் அதிர்ச்சி தரம் விதமாக கரப்பான் பூச்சி விழுந்துள்ளது தெரியவந்ததது. பின்னர் கடையின் ஊழியரிடம் மூர்த்தி தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஆரணி பகுதியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன், சிறுமி ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன. இந்த நிலையில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…