தூத்துக்குடி: பெண்களிடம் நகைப்பறித்து திரைப்படம் எடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி முத்துமாரி(57).இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது பைக்கில் வந்த இருவர் அவர், கழுத்தில் அணிந்திருந்த 12பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றனர்.
இதேபோல் கதிரேசன் ரோடு பகுதியைச் சேர்ந்த வெள்ளத்தாய் என்பவர், ஏ.கே.எஸ் தியேட்டர் பகுதியில் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த மர்மநபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 6பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றனர்.
புகாரின் பேரில் நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்டது, தி்ண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த சானபுல்லா மற்றும் அவருடைய மகன் ஜாபர் என்பதும், இதற்கு சானபுல்லா மனைவி ரஷியா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மூவரும், கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கலில் வசித்து வருகின்றனர். சினிமா துணை நடிகர்களான இருவரும் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு, நகையை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதில் கிடைத்த பணத்தை வைத்து சானபுல்லா திரைபடம் ஒன்றையும், எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மூன்றுபேரையும் சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…