மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று மதுரைக்கு வந்துள்ளது. இந்நிலையில், ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நிதியமைச்சர் அஞ்சலி செலுத்தி சென்ற பிறகு அஞ்சலி செலுத்தலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியுள்ளனர்.
மேலும், மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…