Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆளுநர் மாளிகைக்கு விரைந்த அப்பாவு; ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!

KANIMOZHI Updated:
ஆளுநர் மாளிகைக்கு விரைந்த அப்பாவு; ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!Representative Image.

ஜனவரி 9ம் தேதி தொடங்கும் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று , உரை நிகழ்த்த வருகை தருமாறு ஆளுநரை சந்தித்து பேரவைத்தலைவர் அப்பாவு  அழைப்பு விடுத்துள்ளார். 


2023 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 9 ம்  தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த பேரவைத் தலைவர் அப்பாவு பேரவையில் உரைநிகழ்த்த வருமாறு ஆளுநர் ஆர் . என்.ரவிக்கு அழைப்பு விடுத்தார். 

ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாகும் , ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , மேற்கொள்ளப்பட இருக்கின்ற பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவுப்புகளும் இடம் பெறும். அதனைத் தொடர்த்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 

அதன்படி  2023ம் ஆண்டிற்கான பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது.  அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூட்டப்பட்டு ,  ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் , பேரவை மரபுப்படி ஆளுநரை நேரில்  சந்தித்து உரை நிகழ்த்த வருகை தருமாறு அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு , ஜனவரி  9ம் தேதி காலை 10 மணிக்கு உரை நிகழ்த்த வருகை தருவதாக ஆளுநர் கூறியதாக  தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்