Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும் பெரியாரும்தான்.. முதல்வர் பேச்சு

UDHAYA KUMAR September 25, 2022 & 10:00 [IST]
உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும் பெரியாரும்தான்.. முதல்வர் பேச்சுRepresentative Image.

பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகிலேயே, சமூகநீதி பேசியவர்கள் வள்ளுவரும் பெரியாரும்தான் என்று கூறியுள்ளார். 

கனடாவில் சமூக நீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாடு நடைபெற்றது. இதில் இணைய வாயிலாக கலந்துகொண்டு பேசினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.  இந்த மாநாடு நடைபெறுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறிய ஸ்டாலின், கடந்த 2017ம் ஆண்டு இதே மாநாடு ஜெர்மனிலும், 2 வது மாநாடு வாஷிங்டனினிலும், தற்போது 3வது மாநாடு கனடாவிலும் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டியதோடு,  இதுபோன்ற மாநாடுகள் மூலம் உலகம் முழுக்க பெரியார் கொண்டாடப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். 

கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல அறிஞர்களின் பேச்சை நேரில் கேட்கமுடியாத நிலையால் வருத்தமாக இருப்பதாகவும், மக்கள் பணிகளால் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.  தமிழ் உணர்வால் சுயமரியாதை மற்றும் மனிதநேய உணர்வால் நாம் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம் என்று தெரிவித்த அவர், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் இருவர்தான். வள்ளுவரும், தந்தை பெரியாரும் தான். அதுபோல்தான் திராவிட மாடல் ஆட்சி இப்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்