தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான ஒ யாங் லி-ஸிங், தெற்கு தைவானில் உள்ள ஹோட்டல் அறையில் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தைவானின் அதிகாரப்பூர்வ மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
ஒ யாங் லி-ஸிங் தைவானின் பல்வேறு ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக இராணுவத்திற்கு சொந்தமான தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார் மற்றும் அவர் இப்போது ஒரு வணிக பயணத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதைத் தொடர்ந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றத்தின் மத்தியில் அவரது மரணம் வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சுற்றி வளைக்கும் வகையில் தற்போது போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீனா, தனது உளவாளிகள் மூலம், தைவானை முடக்கும் பொருட்டு, தைவானின் ஏவுகணைத் திட்டத்தின் முக்கிய தலைவரை கொன்றுள்ளதா என்ற சந்தேகமும் பல மேற்கத்திய நாடுகளிடையே எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…