ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதனால் மக்கள் மற்றும் விலங்குகள் பல்வேறு இன்னல்களை சாந்தி வருகின்றனர்.
கடுமையான வெயிலால் தண்டவாளங்கள் வளைந்து உருகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வரலாறு காணாத வெப்ப அலையின் விளைவாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் வளைந்து சேதமானது.வெளிப்புற வெப்பநிலை 40 செல்சியஸ்க்கு மேல் பதிவானதால், புதன்கிழமை அன்று பிரிட்டன் முழுவதும் ரயில் சேவைகள் பெரும் இடையூறுகளை சந்திக்க நேரிட்டது. மேலும், தீவிர காலநிலை காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த கடுமையான வெயில் காரணமாக ரயில் சிக்னல் விளக்குகளில் இருக்கும் பிளாஸ்டிக்குகள் உருகி வரும் புகைப்படங்களை தேசிய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பார்க்கு மக்களை அதிர்ச்சிகுளக்கில்லாது. மேலும் கிழக்கு கடற்கரை பிரதான பாதையில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை தங்களது பயண பாதையை மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டரின் சில பகுதிகளில், அதிக வெப்பநிலை சாலைகளை உருக வைத்தது. மேற்பரப்பு வெப்பநிலை 54 செல்சியஸை தாண்டியதால் லிங்கன்ஷையரில் உள்ள சாலைகளும் உருகத் தொடங்கியது.
பிரிட்டனில் அனல்காற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…