Train ticket : 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வெளியூரில் இருந்து தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதி முதல் மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இதனால், இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய வரும் பயணிகள் 24 ஆம் தேதியும், அக்டோபர் 23 ஆம் தேதி பயணம் செய்ய வரும் பயணிகள் 25 ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…