திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(70), விவசாயி. இவரது மனைவி சகுந்தலா(66). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் வீடுகட்டுவதற்காக, கடந்த 23 ஆம் தேதி அஸ்திவாரம் தோண்டியுள்ளனர். அப்போது 3அடி ஆழத்தில் செம்பு பானையில் புதையல் ஒன்று கிடைத்துள்ளது, அதனை சகுந்தலா யாரிடமும் கூறாமல் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
பின்னர் இந்த தகவல் குறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து புதையலை தர கேட்டுள்ளனர், ஆனால் சகுந்தலா இது எங்கள் நிலத்தில் கிடைத்தது கொடுக்கமாட்டேன் என கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அந்த செம்பு பாத்திரத்தை கண்டுபிடித்தனர். அதில் கால் சலங்கை மணிகள் 23, உடைந்த நிலையில் காப்பு வடிவிலான பொருட்கள் 10, மணித்துண்டு 1, சிறிய துண்டுகளாக 13 உலோக பொருட்கள், சதுர வடிவிலான உலோக பொருள் 1 ஆகியவை இருந்தது. இதில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்ததா? என சகுந்தலாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இதனை தொல்லியல்துறையினரிடம் ஒப்படைத்த பின்னர் இது எதனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் இதில் ஏதேனும் தங்கம் உள்ளனவா என ஆராயப்படும் என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…