சென்னையில், விபத்து ஏற்படுத்தியவரை பிடிக்க சென்ற போலீசாரை, போதையில் காரை கொண்டு மோத முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில், அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ மீது மோதியுள்ளது.
இது தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர், காரின் எண்ணை வைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபரின் மகன், முகம்மது முதீனை பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது போதையில் இருந்த அவர், விபத்து ஏற்படுத்திய காரை கொண்டே போலீசாரை மோத வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டுதல் மற்றும் மது போதையில் காரை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…