Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிரிக்கு எதிரி நண்பன்....எலியை விரட்ட பூனையை நாடிய போலீசார்...!

madhankumar June 29, 2022 & 14:58 [IST]
எதிரிக்கு எதிரி நண்பன்....எலியை விரட்ட பூனையை நாடிய போலீசார்...!Representative Image.

கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எலிகள் தொல்லையால் பூனையின் உதவியை போலீசார் நடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள சிக்கப்பலாபுரம் மாவட்டம் கவுரி பிதனுர் காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை எலிகள் கடித்து குதறி வைத்து விடுவதால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையின் போது பலசமயம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் என்ன செய்வது என தெரியாது நின்ற போலீசார் எலியின் பரம எதிரியான பூனையின் உதவியை நாடலாம் என முடிவெடுத்துள்ளனர். இதற்காக முதல் கட்டமாக இரண்டு பூனைகளை வாங்கி காவல் நிலையத்தில் விட்டுள்ளனர். ஆஹா நமக்கு சரியான வேட்டைதான் என நினைத்த பூனை எலிகளை விரட்டி விரட்டி பிடித்துள்ளது.

இதனால் நிம்மதியடைந்த போலீசார் அந்த பொண்ணைகளை மேலும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். பூனைகள் இருப்பதால் எலிகள் அவ்வளவாக வெளியே வருவதில்லை எனவும் ஆவணங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் போலீசார் கூறி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்