இந்தியாவில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், 2017 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையில் ஒரு வரைபடத்தைப் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “கடந்த ஐந்தாண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவீதத்தை இந்த வரைபடம் காட்டுகிறது. பிரதமரே, ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?
தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…