புதுச்சேரி: அமலாக்கத்துறை என்பது தன்னாட்சி அமைப்பு என்றும், சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பாஜக அரசின் 9ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உலக அளவில் இந்தியா மூன்றாவது வளர்ந்த நாடாக உள்ளது. 100ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பிரதமர் மோடி 9ஆண்டுகளில் செய்துள்ளார் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசுகையில், அமலாக்கத்துறை என்பது தன்னாட்சி அமைப்பு. அது சட்டத்திற்கு உட்பட்டுத் தான் நடக்கிறது. சோதனை நடைபெற்றதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…