கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர லீவு வேண்டும் என அரசு ஊழியர் ஒருவர் அளித்துள்ள விடுமுறை விண்ணப்பம் இணையத்தை கலக்கி வருகிறது.
பொதுவாக அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் அதற்காக பல்வேறு காரணங்களை கூறுவது வழக்கம். அதிலும் சிலர் கூறும் காரணங்கள் நகைச்சுவையாக மாறி இணையத்திலும் வைரலாகி விடும்.
அதேமாதிரியான ஒரு கடிதம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவர் அளித்துள்ள விடுப்பு விண்ணப்பத்தில், தனது 3 குழந்தைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் என்றும் இதனால் தனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தாய் வீட்டில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வர வேண்டியுள்ளதால் தனக்கு மூன்று நாட்கள் லீவு வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது இந்த லீவு லெட்டர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…