நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் (UNGA) தனது உரையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்த்து போராட 2.9 பில்லியன் டாலர் புதிய உதவியை அறிவித்தார்.
“பாகிஸ்தான் இன்னும் தண்ணீரில் மூழ்கி உள்ளது, உதவி தேவை” என்று ஜனாதிபதி தனது உரையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொது அவையில் நடந்த உயர்மட்ட விவாதத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார்.
பாகிஸ்தானின் கடன்களை சமாளிக்க உதவுமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உலகத் தலைவர்களை வலியுறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு பிடன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…