Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. இளம் பெண் கொலை வழக்கில் பாஜக தலைவரின் மகன் கைது!!

Sekar September 24, 2022 & 18:03 [IST]
பரபரப்பு.. இளம் பெண் கொலை வழக்கில் பாஜக தலைவரின் மகன் கைது!!Representative Image.

உத்தரகாண்டில் ரிசார்ட்டின் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த பெண்ணை கொன்றதாக ரிசார்ட்டின் உரிமையாளரான பாஜக தலைவரின் மகன் மற்றும் ரிசார்ட்டில் இரண்டு ஊழியர்கள் உத்தரகண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் புகார் அளிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் தவறாக நடந்து கொண்டதாக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ரிசார்ட்டின் உரிமையாளரான புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தால் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹரித்வாரைச் சேர்ந்த பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா. வினோத் ஆர்யா முன்பு உத்தரகாண்ட் மாட்டி கலா வாரியத்தின் தலைவராக மாநில அமைச்சர் அந்தஸ்தில் இருந்தார்.

உத்தரகாண்ட் பாஜகவில் வினோத் ஆர்யா தற்போது எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்று மாநில கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் மன்வீர் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வினோத் ஆர்யா மற்றும் புல்கித் ஆர்யா ஆகிய இருவரையும் பாஜக கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்