தற்போது நெட்டிசன்களிடம் ரக்கர்ட் பாய்ஸ் குறித்த விவாதங்கள் எழுந்து விவாதங்கள் நடந்துவருகிறது. இந்த மாதிரி பசங்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் என இணையத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இந்த விவாதங்கள் பல காலமாக நமது மத்தியில் இருந்துகொண்டுதான் வருகின்றன. ஆனால் முன்பு முரட்டுத்தனமான பசங்க VS பழம் என்ற வார்த்தைகளை பயன்படுத்து விவாதங்கள் எழுந்துவந்து. அது தற்போதைய ட்ரென்ட்க்கு ஏற்றாற்போல் சாக்லேட் பாய்ஸ் VS ரக்கர்ட் என மாறி விவாதங்கள் நடந்து வருகிறது.
எதற்கெடுத்தாலும் சுருக்கென கோபம் கொள்ளும் ஆண்கள், அல்லது எப்போது முறைத்துக்கொண்டு நடப்பது போன்றவைகளை வைத்து இவர்கள் ரக்கர்ட் பாய்ஸ் கேட்டகிரி என புரிந்துகொள்ளலாம். சுருக்கமாக சொன்னா குட்டி படத்தில் வரும் தனுஷ் சாக்லேட் பாய் சுள்ளான் படத்தில் வரும் தனுஷ் ரக்கர்ட் பாய், என வைத்துக்கொள்ளலாம்.
சரி தற்போது இந்த விவாதங்கள் எழ காரணம் என்ன என பார்த்தல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தமிழா தமிழா நிகழ்ச்சி தான் என்று கூறலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி 2019இல் வெளியது ஆகும் ஆனால் அதனை தற்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
அதில் பெண் ஒருவர் ரக்கர்ட் பாய்ஸ்தான் அழகு என்று சொல்லி இருப்பார். அவங்கதான் அடிக்கடி சண்டை போடுவாங்க. ரோட்டில் யாராவது நம்மை சைட் அடித்தால் சண்டைக்கு போவார்கள். எப்போதும் அவர்கள் சண்டை போடுவது போலவே இருப்பார்கள். அவர்களைத்தான் எங்களுக்கு பிடிக்கும். சாக்லேட் பாய்ஸ் என்றால் பயப்படுவார்கள். அவர்கள் சண்டைக்கு போக மாட்டார்கள். அவர்களை எங்களுக்கு பிடிக்காது என்று அந்த பெண் குறிப்பிட்டு இருந்தார்.இதுதான் தற்போது இணையம் முழுக்க இத்தனை நாட்கள் கழித்து டிரெண்டாகி உள்ளது.
அந்த பெண்ணின் இந்த கருத்துக்கு தற்போது கண்டனங்களும் எழுந்து வருகிறது. ரக்கர்ட் பாய்ஸ் ஆண்கள்தான் abusive குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சினிமாவை பார்த்துவிட்டு ஆண்கள்தான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. பெண்கள் என்றால் "அடக்க ஒடுக்கமாக" இருக்க வேண்டும் என்பது எப்படி தவறான புரிதலோ அதேபோல் ஆண்கள் என்றால் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறான கருத்து என்று ஆண்கள் வாதம் செய்துவருகின்றனர்.
ஆனால் இந்த கருத்திற்கு பெண்கள் தரப்பு கூறும் பதில் என்னவென்றால்? ரக்கர்ட் பாய்ஸ் உடன் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். அதோடு சாப்ட்டாக இருக்கும் பாய்ஸ் எதிர்காலத்தில் possesive ஆகி.. எல்லாவற்றுக்கும் சந்தேகம் அடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் வாதம் வைத்து வருகிறார்கள்.
தற்போது இதை வைத்து மீம்ஸ்களும் கடுமையான வாதங்களும் நடந்து வருகின்றன. இந்த கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. ஆனால் சில நடுநிலையில் இருந்து இரண்டும் சரிதான் அது அவர்களது தனிப்பட்ட கருத்து என கூறிவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…