இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் 76வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார், அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் தொலைபேசி அழைப்புகளைப் வரும்போது ஹலோ என கூறுவதற்கு பதிலாக, ‘வந்தே மாதரம் ' என்று கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் 76 வது சுதந்திர ஆண்டில் நுழைகிறோம். எனவே, அதிகாரிகள் ஹலோ என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்லிப் பழக வேண்டும்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…