சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசை கண்டிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடகா நமக்கு காவிரி நீர் தருகிறது.
மேகதாதுவில் அணைக்கட்டினால் கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமாரின் தொகுதி தான் அதிக பலனடையும்.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போது, மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என பாஜக தான் வாக்குறுதி அளித்தது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்வர், சித்தராமையாவையும், துணை முதல்வர் டி.கே சிவகுமாரையும் கண்டிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியமில்லை.
இந்நிலையில் முதல்வர் பெங்களுரு சென்றால் கோ பேக் ஸ்டாலின் என்று சொல்வோம். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…