சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நாளை காலை 8:30 மணியளவில் விஜயகாந்த் தனது கரங்களால் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேமுதிக கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மகளிரணி, உட்பட பல தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் இருந்த விஜயகாந்த்தை பொதுவெளியில் பார்த்த தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…