தேவலாயத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகனும், மகளும் டேங்கர் லாரியில் விருந்து மண்டபத்திற்கு வந்ர்ஹ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருச்சூர் மணலூர் வடக்கில் உள்ள காரமுக் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் டேவிஸ் மற்றும் தெரசா தம்பதியரின் மகள் டெலிஷாவுக்கும், காஞ்சிரப்பிள்ளி ஆனக்கல் மேலோட்டின் மறைந்த மேத்யூ-ஏத்தம்மா தம்பதியின் மகன் ஹென்சனுக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகல் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தம்பதிகள் இருவரும் அங்கிருந்த டேங்கர் லாரியில் ஏறி, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருந்த விருந்து மண்டபத்திற்கு வந்த வீடியோ சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது.
மணப்பெண் டெலிஷா தனது தந்தையான டேங்கர் லாரி ஓட்டுநருடன் சிறிய வயதில் இருந்தே பலமுறை பயணம் செய்துள்ளார். இதனால் அவருக்கு டேங்கர் லாரி ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே எம்.காம் படித்த கையோடு கனரக வாகனங்களை ஓட்டுவதற்காக டிரைவிங் லைசன்ஸையும் பெற்றுள்ளார். கொச்சியில் இருந்து பெட்ரோல் எடுத்து மலப்புரம் பம்ப்பில் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்த டெலிஷாவிற்கு துபாயில் 18 சக்கரங்கள் கொண்ட டிரக்கை ஓட்டும் வேலை கிடைத்துள்ளது.
அங்கு ஜெர்மன் நிறுவனத்தில் டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றிய ஹென்சன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் டெலிஷா - ஹென்சன் திருமணம் முடிவடைந்ததுள்ளது. அதன் பின்னர் இருவரும் டேங்கர் லாரி ஓட்டி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…