சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. அதன்படி, சீனா ராணுவ படைகள் தைவானை சுற்றி போர் ஒத்திகைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணி அளவில் தைவானை சுற்றியுள்ள ஆறு முக்கிய இடங்களில் போர் ஒத்திகை நடைபெற உள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கடற்படை, விமானப் படை போர் ஒத்திகைகள் நடைபெறும் நேரத்தில் வேறு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தைவானை சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது தீயுடன் விளையாடுவதற்கு சமம் என சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில், தைவானுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், சீனாவின் மிரட்டலை கருத்தில் கொள்ளாத அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணம் சீனாவை சீண்டியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாகவே தைவானை சூழ்ந்து மாபெரும் போர் ஒத்திகையை சீனா இன்று அறிவித்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…