Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது சாதாரண கப்பல் அல்ல..? மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்...!

Bala August 04, 2022 & 13:00 [IST]
இது சாதாரண கப்பல் அல்ல..?  மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்...! Representative Image.

இலங்கையில் சீன உளவு கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்குப் பேராபத்து என மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் பூஜ்ய நேரத்தில் வைகோ பேசியதாவது, இந்தியாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி சீனாவின்  கப்பல் இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்கும், உணவுப் பொருள்களை ஏற்றுவதற்கும் மட்டும் தான் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கூறுகிறது. ஆனால் அந்தக் கப்பல் சாதாரண கப்பல் இல்லை என இந்த அவைக்குக் கூற விரும்புகிறேன்.

யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல், கடல் சார் மற்றும் கடலோர பகுதிகளை ஆய்வு செய்யும் சக்தி வாய்ந்த உளவு கப்பல், இந்த கப்பல்கள் மூலம் சேட்டிலைட் கண்ணில் படாமல் ஏவுகணைகளை ஏவ முடியும், மேலும் இலங்கையை ஒட்டியுள்ள தமிழகத்தின் அணு நிலையங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்திய பல உதவிகளைச் செய்த போதும், இந்தியாவை தரமசங்கடத்திற்குள்ளாக்கும் இந்த செயலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அவையில் விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்