உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்துள்ளது, இதை கவனித்த அந்த பெண் தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால், உடனடியாக அவரால் மேலே ஏறமுடியாததால் உதவி கேட்டு கத்தியுள்ளார்.
இதை பார்த்த ரயில் அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி சென்று கைகொடுத்து, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். தற்போது, அந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. ஒரு சில வினாடிகளில் ஒரு உயிரை காப்பாற்றிய அந்த அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
அவசரகதி அல்லது சோம்பேறித்தனம் காரணமாக அலட்சியத்துடன் தண்டவாளத்தில் நடந்து சென்றால் உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்த்த இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…