இன்று நடந்த டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக பெண் கவுன்சிலர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றியைப் பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. அதே போல சமீபத்தில் நடந்த மேயர் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பதவிக்கு நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதில் நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கேட்சியினர் தங்கள் கருத்தை முன்வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பாஜக கட்சியினர்.
இதனால் இரண்டு தரப்பு பெண் கவுன்சிலர்களுக்கு இடையில் வாய் தகராறு ஏற்பட்டது. அது அப்படியே கை கலப்பையாக மாறி அவர்கள் தண்ணீர் பாட்டில், பேப்பர் ஆகியவற்றைக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த மாநகராட்சி கூட்டத்தை ஒத்திவைக்கும் படி டெல்லி மேயரிடம் பாஜகவினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் டெல்லி மேயர் அதனை மறுத்துவிட்டார். ஆகவே, ஒரு மணி நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…