புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க.
கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் என்ற பிரபல ஜவுளி கடை, இன்று கடை திறந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை நினைவு கூறும் விதமாக கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த கடையில் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்ததையடுத்து அதிகாலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள்,ஆண்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர்.
கடை திறந்த பின் அலைமோதிய மக்கள் கூட்டம், முண்டியடித்துக் கொண்டு புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பின்னர், ஒரு ரூபாய்க்கு முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…