வரும் வாரங்களில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு பதிவு சேகரிக்க திமுக விளையாட்டு நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது ஆடியோ, வீடியோ வைத்து அரசியல் செய்யும் பாஜக ஒரு கட்சியா என்று மக்களிடம் விவாதம் செய்கிறார். மேலும் எங்கள் கட்சி வேட்பாளரை 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் நான் ஈரோடு தொகுதிக்கு ஒவ்வொரு மாதமும் வந்து செல்வேன் என்று உதயநிதி உறுதியளித்தார். அது மட்டும் இல்லாமல் அடுத்த 5 மாதங்களுக்குள் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…