agneepath : அக்னிபாத் திட்டத்தில் ராணுவ பணி முடிக்கும் வீரர்களுக்கு டாடா குழுமத்தில் பணி வழங்குவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு (அக்னிபாத் திட்டம்) ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னிபாத் ராணுவ பணி திட்டத்தில் பணி முடிந்து திரும்பும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க டாடாநிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள டாடா குழும தலைவர் சந்திரசேகரன், “இந்த திட்டம் ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தேசத்தை பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும், அக்னி வீரர்களின் செயல்திறனை அங்கீகரிப்பதோடு அவர்களுக்கு தொழில்துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்க டாடா குழுமம் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…