2023 ஆம் ஆண்டில் பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் அறிவிப்பின் படி, 1950 க்குப் பிறகு உலக மக்கள்தொகை மெதுவான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது 2030 இல் 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல வளரும் நாடுகளில் பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி காணப்பட்டாலும், வரும் காலங்களில் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான உயர்வு எட்டு நாடுகளில் இருக்கும் என்றும், அவை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கக்கூடும் என்றும், 2023ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என குறிபிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…