தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பின்னலாடைக்கான நூல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பின்னலாடை நிறுவன ஊழியர்கள் மற்றும் உரிமையாளகர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நூல்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது. மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…