கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கீழாரூர் என்ற பகுதியில் இந்து மத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் பிரிவு 'துர்கா வாஹினி' சார்பில் கடந்த 22-ம் தேதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பெண்கள் கையில் வாள் ஏந்தி பேரணியாக சென்றனர், மேலும் சில பெண்கள் கையில் சிலம்பம் போன்ற நீளமான குச்சியை தூக்கி சென்றனர். இந்த பேரணி தொடர்பான விடீயோக்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த பேரணி தொடர்பாக இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்திய என்ற அமைப்பு போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரை தொடர்ந்து இந்து மத அமைப்பு விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் பிரிவு 'துர்கா வாஹினி' நடத்திய பேரணியில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்திய என்ற இஸ்லாமிய அமைப்பு நடத்திய பேரணியில் இந்து கிறிஸ்துவ அமைப்பினரை அமைதியாக இருந்தால் உங்களை வாழவிடுகிறோம் என ஒரு சிறுவன் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…