திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞரின் இறுதி நிமிட பதை பதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு மலைக்கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பர்களுடன் சென்று ஆபத்தான பாறையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் தவறி விழுந்து மாயமானார்.
கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம்
— DON Updates (@DonUpdates_in) August 4, 2022
⚠️ பதைபதைக்கும் காட்சிகள் pic.twitter.com/7lELUMYPUE
இதனை தொடர்ந்து இவரது நண்பர்கள் கேமராவில் பதிவு செய்த இறுதி நிமிட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் மாயமான இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இரவு நேரம் ஆனதாலும் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…