பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதி சடங்கில் பங்கேற்ற தம்பியும் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணனை கொன்ற பாம்பு தம்பியையும் பழிவாங்கியுள்ளது என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள பவானிபூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அரவிந்த் மிசாரா. இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று பாம்பு கடித்ததால் உயிரிழந்தார், அண்ணன் உயிரிழந்த செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இறந்தவரின் தம்பியான கோவிந்த் மிஸ்ரா (22) பவானிப்பூர் கிராமத்திற்கு வந்திருந்தார். இறுதி சடங்கு முடிந்த மறுநாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரை பாம்பு ஒன்று கண்டித்துள்ளது, பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பாம்பு கடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் நெறி வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து சென்றனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் மற்றும் தம்பியை ஒரே பாம்பு பழிவாங்கும் எண்ணத்தோடு கடைந்து கொன்றிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…