Tamilnadu News Live : மத்திய அரசு அறிவித்துள்ள (அக்னிபத் திட்டம்) 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் திட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது. தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதனால் இந்தியா முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகம் அருகே அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…