பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அருண் லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது கடந்த மே 2 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இதற்கிடையில், தனது தேனிலவு திட்டம் மற்றும் கிரிக்கெட் சம்பந்தமான திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அருண் லால் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹா என்ற 38 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
தற்போது, மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக இருந்த அருண் லால் சமீபத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளாராம். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 9 மாதங்களாக கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், அவரால் குடும்பத்துடன் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியவில்லையாம். திருமணத்திற்கு பிறகும் எங்குமே செல்லவில்லையாம். இதனால், தனது கிரிக்கெட் வேலை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, தனது மனைவியுடன் துருக்கிக்கு தேனிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம். என்னதான் இருந்தாலும் அவரும் மனுசன் தானே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…