Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jamun Fruit Side Effects in Tamil: தப்பி தவறிக்கூட இந்த பொருட்களை நாவல்பழம் சாப்பிட்டப் பிறகு சாப்பிட்டுறாதீங்க...!!

Nandhinipriya Ganeshan June 25, 2022 & 12:30 [IST]
Jamun Fruit Side Effects in Tamil: தப்பி தவறிக்கூட இந்த பொருட்களை நாவல்பழம் சாப்பிட்டப் பிறகு சாப்பிட்டுறாதீங்க...!!Representative Image.

Jamun Fruit Side Effects in Tamil: மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு, நாவல்பழம் சீசனும் ஆரம்பிச்சாச்சு. நம்மில் பலருக்கும் இந்த நாவல்பழத்தை மிகவும் பிடிக்கும். இந்த பழம் எல்லா காலங்களிலும் கிடைப்பது கிடையாது. குறிப்பாக, ஜீன், ஜீலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் மட்டுமே (naval palam season) இந்த பழம் கிடைக்கும். நாவல்பழம், நாவல் கொட்டை பொடி, நாவல் இலை என்று அனைத்துமே அற்புதமான மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாவல் பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.

 

அனைவரும் பிடித்தமான இந்த பழத்தில் பல நன்மைகள் இருந்தாலும், இதை சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அது என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

நாவல்பழத்தை சாப்பிடும் முறை:

ஆனால், அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாவல் பழத்தை வெறும் வயிற்றில் மட்டும் சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இதன் புளிப்பு சுவையானது அமிலத்தனமையை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. இதனால் வயிற்று வலி மற்றும் எரிச்சல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக நாவல்பழம் செரிமானத்திற்கு ஏற்ற பழம் என்பதால், ஆதாரங்களுக்கு பின்பு சாப்பிடுவது நல்லது.

நாவல் பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்:

பால்: நாவல் பழம் சாப்பிட்ட 1 மணி நேரம் வரை பால், பால் கலந்த திரவங்கள் என எதையும் குடிக்க கூடாது. ஏனென்றால், இது அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.

தண்ணீர்: நாவல் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால், அது அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, நாவல் பழம் சாப்பிட்டு 30 லிருந்து 40 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்கலாம், அப்போது எந்த பிரச்சனையும் இருக்காது.

மஞ்சள்: நாவல்பழம் சாப்பிட்ட உடனே மஞ்சள் சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது. ஏனென்றால் நாவல் பழத்திற்கு அமிலத்தன்மையை சுரக்கும் தன்மை அதிகம். இதனால் நாவல் பழமும் மஞ்சளும் சேர்ந்து வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும். அதனால், இந்த பழம் சாப்பிட்ட சுமார் அரை மணி நேரம் வரை மஞ்சள் கலந்த எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.

ஊறுகாய்: மேலே கூறியது போல தான். நாவல்பழத்திற்கு அமிலத்தன்மையை அதிகளவு சுரக்கும் தன்மை உண்டு. இதில் ஊறுகாயும் சேர்த்து சாப்பிட்டால் நினைத்து பாருங்கள் நீங்களே. ஊறுகாய் சாப்பிட்டாலே சில மணி நேரம் வயிறு எரிச்சல் எடுக்கும். அதோடு நாவல் பழம் சேர்ந்தால், அவ்வளவு தான் மோசமான வயிறு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நாவல் பழம் சாப்பிட்ட பிறகு ஊறுகாயையும் தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்