நவராத்திரியின் மூன்றாவது நாளில் காராமணி சுண்டல், கோதுமை சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த ரெசிபி செய்வதும் மிகவும் எளிது. இதில் ஸ்பெஷாலிட்டியே பச்சரிசிக்கு பதிலாக கோதுமை ரவை சேர்ப்பது தான். இது உங்களுக்கு ஒரு புதுவிதமான சுவையை கொடுக்கும். நிச்சயம் வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 2 கப்
பாசிபருப்பு - 1/2 கப்
சம்பா கோதுமை ரவை - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 கப்
பாதாம் பருப்பு - 1
உலர்ந்த திராட்சை - 10
முந்திரி பருப்பு - 10
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எடுத்து வைத்து கோதுமை ரவை மற்றும் பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்து இரண்டையும் அதில் கொட்டி மிதமான தீயில் 4 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இப்போது, மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை சூடு செய்து கொள்ளவும்.
இப்போது குக்கரில் வேக வைத்த கோதுமை ரவை கலவையில், கரைத்த வெல்லப்பாகை ஊற்றி, குறைந்த தீயில் வைத்து கிளறிவிடவும்.
அதன்பின்னர், முந்திரி பருப்பு, திராட்சை, பாதாம் மூன்றையும் சிறிதளவு நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து அந்த கலவையில் கொட்டி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான கோதுமை ரவை சர்க்கரை பொங்கல் ரெடி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…