ஆயுர்வேதம் உலகின் பழமையான சிகிச்சை முறையாகும். இது நோயை எதிர்த்துப் போராடுவதை விட நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பல ஆயுர்வேத வைத்தியங்கள் வீட்டிலேயே இருக்கின்றன. இதற்காக, அதிகமாக செலவு செய்யவே தேவையில்லை. வாங்க நம்ம வீட்டில் இருக்கும் ஆயுர்வேத மருந்துகளையும் அதை எப்படி பயன்படுத்துவதையும் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சளி மற்றும் காய்ச்சல் நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை (Cold Cough Ayurvedic Medicine) வைத்து அதன் தன்மையை குறைக்க முடியும்.
மஞ்சள் கலந்த பால்:
1 கப் வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ½ டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி குடிக்கவும். இது தொண்டை கரகரப்பை உடனடியாக விரட்டுகிறது. மேலும், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை முழுமையாக விரட்டியடிக்கும்.
தேன் டீ:
வெதுவெதுப்பான நீரில் அல்லது டீயில், 1 டீஸ்பூன் தேனை கலந்து குடிக்கவும். சளி, இருமல் வெகுவாக குறையும்.
கிராம்பு:
3 கிராம்பு மொட்டுகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள். எந்த சுவையும் இல்லாத வரை அவற்றை நன்றாக மென்று சாறை உறிஞ்சி விழுங்கி விடுங்கள். இது தொண்டை புண் மற்றும் இருமலால் ஏற்படும் தொண்டை வலியை நீக்குகிறது.
சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டானிக்ஸ்:
இம்மாகுலேட் இம்யூனிட்டி டிஞ்சர்
இது சளி, காய்ச்சல், தொண்டை புண், காய்ச்சல், குமட்டல் போன்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் கசப்பான சுவை கொண்ட மூலிகை டானிக் (Ayurvedic medicine for cold and fever) ஆகும். இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
காய்ச்சல் அல்லது சளியால் அவதிப்படும்போது (ஒவ்வொரு 2 - 3 மணி நேரத்திற்கும்) 5 சொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அறிகுறிகள் குறையும் போது, நோய் மீண்டும் வராமல் தடுக்க ஒரு நாளைக்கு மூன்று முறை (அடுத்த 7 நாட்களுக்கு) 2 சொட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மஹாசுதர்சன சூர்ணம்
இந்த டானிக் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற அனைத்து வகையான தொற்றுநோய்களையும் எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு இயற்கை நச்சு நீக்கியாகும், இது தொற்று கிருமிகளைக் கொன்று, குமட்டல், சளி, காய்ச்சல் மற்றம் தொண்டை புண் ஆகியவற்றை நீக்குகிறது. இது ஒரு சக்திவாய்ந்த கல்லீரல் டானிக்கும் கூட.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
சளி அல்லது காய்ச்சல் இருக்கும் நேரத்தில், இந்த டானிக்கை ½ டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒவ்வொரு 2 முதல் 4 மணி நேரத்திற்கும் உட்கொள்ளுங்கள். அறிகுறிகள் குறைந்துவிட்டால், அதே அளவை ஒரு நாளைக்கு 2-3 முறை தொடரவும். நோய் மீண்டும் வராமல் தடுக்க 7 நாட்கள் வரை சாப்பிடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…