Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 மாசத்துல 2 மடங்கு முடி அடர்த்தியாக, இந்த ஒரே பொருள் சேர்த்து ஹேர் பேக் போட்டாலே போதும்...

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 13:20 [IST]
2 மாசத்துல 2 மடங்கு முடி அடர்த்தியாக, இந்த ஒரே பொருள் சேர்த்து ஹேர் பேக் போட்டாலே போதும்...Representative Image.

How to Get Rid of Hair Fall Naturally Permanently: சீரகம் ஒரு அற்புதமான மசாலா பொருள் ஆகும். இது உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தை சீராக்குதல், செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சோகையை தடுப்பது மற்றும் பல முக்கிய நன்மைகள் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. சீரகம் மட்டுமல்ல, இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் நம் உடலுக்கு சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், சீரகம் பலவிதமான அழகு நன்மைகளையும் வழங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க. கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகத்தை எப்படி பயன்படுத்துவது என்று இப்பதிவில் பார்க்கலாம். 

❖ முடி உதிர்வுக்கு 

ரொம்ப நாட்களாக முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கருஞ்சீரக எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. அதற்கு, கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பின்னரும் இந்த எண்ணெய் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து எப்பவும் போல முடியை பின்னிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்வு நீங்கி அடர்த்தியான, கருமையான முடி வளரும். 

❖ முடி வளர்ச்சிக்கு

நீங்க நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படுறீங்களா? கருஞ்சீரகத்தை ஹேர் பேக் செய்து பயன்படுத்துங்க. 1 ½ டேபிள் ஸ்பூன் கருப்பு சீரகத்தை ¾ கப் தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இதில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கி, உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து முடியை அலசிவிடுங்கள். இதை வாரம் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். முடி வளர்ச்சி நீங்க நினைத்துக் கூட அளவிற்கு இருக்கும்.

❖ பொடுகு நீங்க

3 டீஸ்பூன் சீரகத்தை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் இந்த தண்ணீரை கொண்டு உங்க தலைமுடியை அலசுங்கள். அதாவது, எப்பவும் போல தலைக்கு ஷாம்பு போட்டு குளித்துவிட்டு ஒரு முறை சாதாரண தண்ணீரால் அலசிவிட்டு, பின்னர் இந்த சீரகத் தண்ணீரை கொண்டு அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து விரைவில் விடுதலை கிடைப்பதோடு, உங்க தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

முடி பிரச்சனை பற்றி இனி கவலையே வேண்டாம். இம்முறைகளை பின்பற்றி பாருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்