Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Curd Without Curd in Tamil: இனி தயிர் போட பக்கத்துவீட்டுல உறை மோர் கடன் வாங்க தேவையில்ல.... நீங்களே ரெடி பண்ணலாம்...!

Nandhinipriya Ganeshan June 18, 2022 & 11:30 [IST]
How to Make Curd Without Curd in Tamil: இனி தயிர் போட பக்கத்துவீட்டுல உறை மோர் கடன் வாங்க தேவையில்ல.... நீங்களே ரெடி பண்ணலாம்...!Representative Image.

How to Make Curd Without Curd in Tamil: இப்பவும் வீடுகளில் தினமும் உணவுக்கு பின்னர் தயிர் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதற்காக வீட்டில் தினமும் தயிர் உறை போடுவார்கள். இது உணவில் சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. செரிமான அமைப்பை சீராக்குவதில் இருந்து, பயனுள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அற்புதமான புரோபயாடிக் வரை. 

கடைகளில் ரெடிமேட் தயிர் இருந்தாலும், வீட்டில் உறை போட்டு சாப்பிடுவதுதான் பலருக்கும் பிடிக்கும். வீட்டில் தயிர் போடும் போது சில சமயங்களில் உறை மோர் இருப்பது கிடையாது. இதனால் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி போடுவோம். அப்படி இல்லையென்றால், கடையில் ரெடிமேட் தயிர் வாங்கி போடுவோம். ஆனால், நமக்கு கிடைக்கும் தயிர் புளித்துப்போய் தண்ணியாக இருக்கும். அதை தவிர்க்கவே, உறை தயிர் இல்லாமல், தயிரை எப்படி உறையவைக்க முடியும் (how to make thick curd instantly) என்று இப்போது பார்க்கலாம். 

கெட்டி தயிர் வேண்டுமா?

அரை லிட்டர் பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்போது தான் தயிர் கெட்டியாக கிடைக்கும். காய்ச்சிய பாலை சற்று ஆற வைத்து,  ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். தயிர் போடுவதற்கு ஒரு நாளைக்கு முன்பே உறை தயிரை போட வேண்டும். இப்போது இதற்கு உறை தயிர் எப்படி செய்வது (how to make curd without curd at home) என்று பார்க்கலாம். 

பால் மற்றும் மிளகாய்:

மேலே கூறிய படி சிறிதளவு பாலை காய்ச்சி அதில் 2-3 பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாயை சேர்த்து நன்றாக கிளறி, அதை ஒரு சூடான இடத்தில் 10-12 மணி நேரம் வைக்கவும். இப்போது உறை தயிர் இல்லாமல் கெட்டியான தயிர் ரெடி.. இதை நீங்க அடுத்த நாள் பாலை காய்ச்சி உறை தயிராக பயன்படுத்தலாம்.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் பால்

முதலில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், காய்ச்சிய வெதுவெதுப்பான பாலை சேர்த்துக் கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மூடி 10 லிருந்து 12 மணி நேரம் ஒரு சூடான இடத்தில் வைக்கவும். 12 மணி நேரத்திற்கு பிறகு கெட்டியான தயிர் தயாராக இருக்கும். இதை இரண்டு ஸ்பூன் எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு 8 மணி நேரம் கழித்து ஃபிரஸான தயிர் கிடைக்கும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் வீட்டில் முயற்சி செய்து (how to make curd instantly) பாருங்கள். 

குறிப்பு: எப்போது தயிர் உறையான உடன் ஃபிரிட்ஜில் எடுத்துவைத்து விடுங்கள். இதனால் தயிர் சீக்கிரம் புளிக்காமல் ஃபிரஸாகவே இருக்கும். 


இனி கெட்டியான தயிருக்கு 8 மணி நேரம் வெயிட் பண்ண தேவையில்ல.... அரை மணி நேரமே போதும்....!!


உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்