1996 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை முதல் பணக்காரர் வரை, குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு முட்டை. அந்தவகையில், இன்றை நாள் சிறப்பாக ஒரு சூப்பரான ரெசிபி ஒன்றை செய்து பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4 (வேக வைத்தது)
அரைக்க:
மிளகு தூள் - 1.5 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வதக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
➤ முதலில் மிளகு தூளையும், சீரகத்தையும் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
➤ பின்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியதும் உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
➤ இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். பின்னர், வேகவைத்த முட்டைகளை ரெண்டாக வெட்டி மசாலாவில் போட்டு இருபுறமும் 2 நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…