How to Make Paneer Without Milk at Home in Tamil: அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளான பன்னீரை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், வீட்டிலேயே எளிமையான முறையில் பன்னீர் செய்யலாம். அதுவும் அரை மணி நேரத்தில். பன்னீர் செய்ய தேவைப்படும் முக்கிய பொருளான பாலில் இருக்கும் "லாக்டோஜன்" என்ற அமிலத்தினால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
இதனால், பால் மட்டுமின்றி அதிலிருந்து செய்யப்படும் அனைத்துப்பொருட்களையும் அவர்களால் உட்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு பதிவு தான் இது. அதாவது, பாலே இல்லாமல் பன்னீர் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
Also Read: வீட்டிலேயே ஈசியா செய்யலாம் பன்னீர்.. அரை மணி நேரம் போதும்..
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 2 கப்
வினிகர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
❖ முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் அளவிற்கு வேர்க்கடலையை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர், கிண்ணம் முழுவதும் தண்ணீர் நிரப்பி கழுவிய வேர்க்கடலையை அதில் போட்டு 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
❖ பின்னர், ஊறிய வேர்க்கடலையை எடுத்து நன்றாக உலர்த்தி அத்துடன் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கெட்டியான பசை போன்று அரைத்துக் கொள்ளவும்.
❖ இப்போது, மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, நாம் தயாரித்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு வேர்க்கடலை கலவை தண்ணீரில் நன்றாக கரையும் படி கலக்க வேண்டும்.
❖ ஒரு 5நிமிடங்கள் நன்றாக கலக்கி, அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது, ஒரு வெள்ளை துணியை எடுத்து கொண்டு, அந்த கலவையை துணியில் ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
❖ இப்போது, வேர்க்கடலை பால் தயார். மீதமான வேர்க்கடலை கசடுகளை கடலை மிட்டாயோ அல்லது அல்வாவோ செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
❖ நாம் எடுத்து வைத்துள்ள பாலை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்கவும். அதற்குள் ஒரு பவுலில் 1 ஸ்பூன் வினிகரும், 4 ஸ்பூன் தண்ணீரும் சேர்த்து கலக்கில் எடுத்துக் கொள்ளவும்.
❖ இப்போது, அடுப்பில் உள்ள பால் கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, நாம் தயாரித்த வினிகர் தண்ணீரில் இதில் சேர்த்து நன்றாக கலக்க, வேர்க்கடலை பால் நன்றாக திரிந்து வரும்.
❖ அந்த கலவையில் இருந்து துணியை பயன்படுத்தி தண்ணீரை முழுவதுமாக வடிகட்டிவிடுங்கள். இப்போது பன்னீர் ரெடி. பின்னர், வினிகர் வாசனை போக 2-3 கப் தண்ணீர் ஊற்றி கலக்கி, மீண்டும் துணியால் வடிகட்டி கொள்ள வேண்டும்.
❖ கொஞ்சம் கூட தண்ணீர் இருக்கக்கூடாது, அந்த அளவிற்கு பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். பிழிந்தவுடன் இறுக ஒரு முடிச்சை போட்டு அதன் மேல் ஒரு கனமான பொருளை ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்.
❖ ரசகுல்லா, ரசமலாய் மற்றும் பல விதமான இனிப்பு செய்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் நிரப்பி அதனுள் மீதமான பன்னீரை போட்டு ஃபிரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பாலே இல்லாமல் பன்னீர் ரெடி!
How to make paneer at home in tamil, how to make paneer butter at home step by step, how to make paneer without milk in tamil, how to make paneer without milk, How to prepare paneer at home in tamil, South indian paneer recipes in tamil, How to prepare paneer at home
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…