How To Use Pregnancy Test Kit In Tamil: திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம் கரு உறுதியாகும் தருணம். கருவுற்ற ஆரம்ப நாட்களில் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்பதை வீட்டிலேயே அறிந்து கொள்ளும் வகையில் பல பெண்களும் பயன்படுத்தும் உபகரணம் தான் கர்ப்ப பரிசோதனை கிட். ஆனாலும் ஒரு சில பெண்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும், மாதவிடாய் நாள் தள்ளிபோய் எத்தனை நாட்கள் கழித்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த சந்தேகங்கள் இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில், இப்பதிவின் மூலம் அனைத்து சந்தேகங்களுக்கும் சரியான, விரிவான பதிலை காண்போம்.
கர்ப்ப பரிசோதனை கிட்டை எப்படி பயன்படுத்த வேண்டும்?
❖ ப்ரக்னன்சி டெஸ்ட் கிட் என்பது கர்ப்பிணி பெண்களின் சிறுநீரில் உள்ள ஹீயூமன் சாரியோநிக் கோநாடாட்ரோபின் என்று அழைக்கப்படும் கர்ப்பக்கால ஹார்மோன் அளவை கண்டயுறியும் கருவியாகும்.
❖ காலையில் எழுந்ததும் (right time pregnancy test) வெளியேற்றும் முதல் சிறுநீரை ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
❖ இப்போது, ப்ரக்னன்சி டெஸ்ட் கிட்டில் சிறுநீரை விடுவதற்கென்றே ஒரு பகுதியிருக்கும் அதில், 5-6 சொட்டுகள் சிறுநீரை விட்டு, ஐந்து நிமிடங்கள் காத்திருக்கவும்.
❖ அந்த பகுதியின் பக்கத்தில் C, T என்ற இரண்டு எழுத்துக்கள் இருக்கும். C என்றால் கன்ட்ரோல், T என்றால் டெஸ்ட் என்று அர்த்தம்.
❖ இப்போது, ஐந்து நிமிடங்கள் கழித்து T என்ற C, T என்ற இரண்டு இடத்திலும் பிங்க் நிறத்தில் கோடு உண்டாகும். இப்படி இரண்டு கோடுகள் தெரிந்தால் பாசிட்டிவ் என்று அர்த்தம். ஒரு கோடு மட்டும் காட்டினால் நெகட்டிவ் என்று அர்த்தம்.
❖ ஒருவேளை, இரண்டு கோடுகளில் ஒரு கோடு அடர் பிங்க் நிறத்திலும், மற்றொரு கோடு மெலிதாகவும் காட்டினால், சாரியான ரிசல்ட் காட்டப்படவில்லை என்று அர்த்தம்.
❖ இதற்கு காரணம் கர்ப்பக்கால ஹார்மோனான ஹெ.சி.ஜி ஆரம்ப நாட்களில் குறைவாக இருக்கலாம், இதனால் தான் ரிசல்ட் இப்படி கிடைக்கும்.
❖ எனவே, இன்னும் சில நாட்கள் கழித்து டெஸ்ட்டை எடுக்க கர்ப்பம் என்றால் இரண்டு கோடுகளும் அடர் பிங்க் நிறத்தில் தெரியும்.
குறிப்பு: சிறுநீரை ஊற்றிய பிறகு 5 நிமிடங்களுக்குள் முடிவை பார்க்க வேண்டும். தாமதமாக பார்க்கும்போது தவறான முடிவுகள் வருதற்கான வாய்ப்புகளும் உண்டு.
எப்போது டெஸ்ட் செய்ய வேண்டும்?
❖ நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உங்களுடைய கடைசி மாதவிடாய் சுழற்சி நாட்கள் முடிந்த 35 – 40 நாட்களுக்கு பின்னர் ப்ரக்னன்சி கிட்டை பயன்படுத்தி பரிசோதனை செய்து பார்க்கலாம்.
❖ ஒருவேளை ரிசல்ட் சரியாக வரவில்லை என்றால், 7-10 நாட்கள் கழித்து மறுபடியும் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
❖ அதிகாலை நேரத்தில் வெளியேறும் முதல் சிறுநீரில் கர்ப்பக்கால ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும்; மற்ற நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் அதன் செறிவு நீர்த்துப்போகும்.
❖ எனவே, கர்ப்ப பரிசோதனைக்கு உகந்த நேரம் எது என்று சொன்னால் காலை நேரம் தான். அதை மட்டும் எப்போதும் மறக்கக்கூடாது.
❖ ஆனால், நீங்க மாதவிடாய் காலத்திற்கு முன்னரே இப்பரிசோதனையை செய்யக் கூடாது. ஏனெனில், அவ்வாறு செய்யும்போது தவறான முடிவை காட்டிவிடும். அதனால் மாதவிடாய் தவறும் நாள் வரை காத்திருந்து இப்பரிசோதனையை செய்வது நல்லது.
குறிப்பு: இது வெறும் ஆரம்பகால பரிசோதனை மட்டுமே. ஒருவேளை நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதியானால், உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் டெஸ்ட்களின் அடிப்படையில் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…