Nellikai Benefits in Tamil: பொதுவாக நெல்லிக்காயில் இரண்டு வகையான நெல்லிக்காய் இருக்கின்றன. ஒன்று சின்ன நெல்லிக்காய், மற்றொன்று பெரிய நெல்லிக்காய் அல்லது மலை நெல்லிக்காய் அல்லது ஆம்லா.. இதை ஆங்கிலத்தின் "இந்திய கூஸ்பெர்ரி" (indian gooseberry in tamil) என்று அழைப்பார்கள். சின்ன நெல்லிக்காய் கொஞ்சம் புளிப்பாக இருக்கும், அனைவரும் விரும்பு சாப்பிடுவார்கள். அதேப்போல் பெரிய நெல்லிக்காயையும் பலருக்கு பிடிக்கும், ஆனால் அதன் துவர்ப்பு சுவை சிலரை வெறுக்கச் செய்கிறது.
இருந்தாலும், இந்த நெல்லிக்காயில் ஒரு விதமான அற்புத மகிமை உண்டு. அதாவது, பெரிய நெல்லிக்காயை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் நாக்கில் ஒருவிதமான் இனிப்பு சுவையை உணரலாம். இதுதான் மலை நெல்லிக்காயின் ஸ்பெஷாலிட்டி. இந்த நெல்லிக்காயின் மரம் மருத்துவ நோக்கங்களுக்காக மற்றும் சமையல் போன்ற பல்வேறு அம்சங்களில் உதவியாக உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவது 20 ஆரஞ்சு, ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு மாதுளைக்கு சமம். அதிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்.
நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது
நான்கு வாரங்களுக்கு இந்திய நெல்லிக்காய்களை எடுத்துக் கொண்ட பிறகு வித்தியாசத்தைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது அப்பழத்தின் தீவிரத்தன்மையையும், மருத்துவ குணத்தையும் (Gooseberry Benefits in tamil) காட்டுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது
நெல்லிக்காய் ஜூஸ் கர்ப்பப்பை வாய், நுரையீரல், மார்பகம், கருப்பை போன்ற உடலில் முக்கிய இடங்களில் வளரும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், இதில் புற்று நோயைத் தடுக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.
இளமையை மீட்டு தரும்
முடி - நெல்லிக்காயில் உள்ள இரும்பு மற்றும் கரோட்டின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. தாய்லாந்தில், இயற்கையான முறையில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
தோல் - உங்கள் தோல் சூரியன் அல்லது புற ஊதா கதிர்கள் வெளிப்படும் போது கொலாஜன் முறிவு ஏற்படலாம். இது உங்கள் சருமத்தை வறண்டு, நெகிழ்வடையச் செய்கிறது. இருப்பினும், ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் முறிவைத் தடுத்து திசுக்களை மென்மையாக்குகிறது.
பார்வை - நெல்லிக்காய் சாறு கண் செல்களின் மைட்டோகாண்ட்ரியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இது வயது தொடர்பான மாகுலர் சிதைவை (AMD) தடுக்கிறது.
சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் விரைவாக கரைந்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இந்த செயல்முறையால், உங்க உடல் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
வலி நிவாரணியாக செயல்படுகிறது
முழங்கால் மூட்டுவலிக்கு, குளுக்கோசமைன் சல்பேட் அல்லது செலிகாக்சிப் மருந்து வலியைக் குறைக்க உதவுகிறது. ஆனால் நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் சப்ளிமெண்ட்ஸ் மருந்துகளை விட அதிக பலனைத் தருவதாக (nellikai uses in tamil) ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள்:
அதாவது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ஆபத்துதான் என அனைவருக்கும் தெரியும். அதேபோல் யார் யார் எப்படி சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கின்றன. அந்த வகையில், நெல்லிக்கனி சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும் என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் - கர்ப்பமாக இருக்கும் போது என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுவார்கள். உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள், ஏனெனில் இது இரண்டு உயிர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது.
நீரிழிவு நோயாளிகள் - நெல்லிக்காய் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கரைப்பதால், உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்கலாம். எனவே, உங்கள் குளுக்கோஸ் அளவை அடிக்கடி பரிசோதித்து உங்கள் மருத்துவரை அணுகவும். சர்க்கரை நோய்க்கான மருந்தை அதன் ஆற்றலைக் குறைத்து எழுதிக் கொடுக்கலாம்.
இரத்தப்போக்கு கோளாறு - சில சமயங்களில் நெல்லிக்காய் உடலில் உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அறுவைசிகிச்சை செய்ய வேண்டியவர்கள் அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். எனவே, மருத்துவரிடன் ஆலோசனைக் கேட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பே நெல்லிக்காயை சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…