Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சப்பாத்தி மாவை பிசைஞ்சு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா?

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 17:30 [IST]
சப்பாத்தி மாவை பிசைஞ்சு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா?Representative Image.

இந்த ஃபிரிட்ஜ் வந்ததும் தான் வந்தது, எல்லா உணவுப்பொருட்களையும் அதில் அடைத்து வைத்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இதெல்லாம் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் இருக்கும் பேராபத்து பற்றி பல பெண்களுக்கு தெரிவதில்லை. வேலையை சுலபமாக்கலாம் என்று நோயை சேமித்து வருகிறோம் என்றே சொல்லலாம்.

சப்பாத்தி, பூரி யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், அதற்காக அதை தினமும் செய்யும்போது சற்று சலிப்பு தட்டதான் செய்யும். அதனால், பல பெண்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான சப்பாத்தி மாவை பிசைந்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக் கொள்கிறார். ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் சப்பாத்தி மிருதுவாக வரும் என்று பலரும் இப்படி செய்வதுண்டு. ஆனால், அது என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரிவதில்லை.

சப்பாத்தி மாவை பிசைந்தவுடன் அதில் நொதிகள் உருவாகத் தொடங்கும். இதனால், அவற்றில் பாக்டீரியாக்கள் உருவாகி வளர தொடங்கும். இதை நாம் ஃபிரிட்ஜில் வைக்கும்போது அந்த நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் கெட்டதாக மாறி குடல் வீக்கம், வயிறு வலி, வயிறு உப்பசம், செரிமானமின்மை, வயிறு கோளாறு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்குமாம். பிசைந்த மாவை மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிடுவது நல்லது. ஒருவேளை மீதமனால் அதை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தும் போது மலச்சிக்கல் பிரச்சனை தான் வரும். எனவே, எப்போது ஃபிரெஷாக பிசைந்த மாவை மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். நீண்ட நாள் நலமுடன் வாழலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்