நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது இன்றைய காலத்தில் சகஜமான ஒரு நோயாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டும் தான் இருந்தது, ஆனால் இப்போது இந்நோய் இல்லாதவர்கள் தான் ஒரு சிலர் இருக்கிறார்கள். வயசானாலே சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது எழுதப்படாத நியதி. அப்படி வயசானாலும் சர்க்கரை நோய் மற்றும் இரத்தம் அழுத்தம் இல்லை என்றால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட அதிகமாவது அதாவது 180 மிகி சதவீதத்தை தாண்டும் நிலையே சர்க்கரை நோய். பல்வேறு காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. சர்க்கரையின் அளவை பொறுத்து டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக டைப் 1 அரிதாகவே ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. டைப் 2 தான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.
பொதுவாக, சர்க்கரை நோயானது மரபியல் நோய் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, பரம்பரையில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பரம்பரையில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, மாறுபட்ட உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
➥ உடலில் ஏதாவது காயங்கள் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு வழக்கத்தைவிட மெதுவாக குணமடைந்தாலோ அல்லது குணமடையாமல் இருந்தாலோ சர்க்கரை நோயின் அறிகுறியாகும்.
➥ பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சிறுநீர்ப்பை தொற்று அல்லது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்.
➥ பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், மயக்கம் ஏற்பட்டால், அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டால் அது குறைந்த ரத்த சர்க்கரை அளவின் காரணமாக இருக்கலாம்.
➥ உங்களுக்கு திடீரென உணவுகளில் அதிகமான சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது போன்ற உணர்வு இருந்தால் அதுவும் நீரிழவு நோயின் அறிகுறியே.
➥ சருமத்தில் ஏதாவது அழற்சி இருந்தால் தான் சருமத்தில் அரிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், சருமம் நீரிழப்பால் நாளடைவில் வறண்டு அடிக்கடி அரிப்பை ஏற்படுத்தும். அதுவும் நீரிழிவு நோயாக இருக்கலாம்.
➥ பல் ஈறுகளில் வலி, வீக்கம் அல்லது சிவந்து இருத்தல் போன்றவையும் நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
➥ நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி வறண்ட, வெடித்துப்போன உதடுகள் அல்லது சொரசொரப்பான நாக்கு போன்றவை. வாய் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாதபோது இந்த உணர்வு ஏற்படுகிறது.
➥ ஒருவர் வழக்கத்தைவிடவும் அதிக சோர்வாக உணர்ந்தால் அதுவும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள உயர் இரத்த சர்க்கரையானது குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உடலை அனுமதிக்காததால், உடல் ஆற்றல் இல்லாமல் சோர்வை ஏற்படுத்துகிறது.
➥ அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இரத்த சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறியாகும். அதாவது, நீரிழிவு இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸை உருவாக்குகிறது. இதை வடிக்க சிறுநீரகங்கள் அதிக வேலை செய்வதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது. மேலும், அந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…